Wednesday, September 26, 2018

தி.மு.க. என்பது விமர்சனங்களையும், பழிச்சொற்களையும் துணிவுடன் எதிர்கொண்டு நிற்கும் இயக்கம் - ஸ்டாலின்

தி.மு.க. என்பது விமர்சனங்களையும், பழிச்சொற்களையும் துணிவுடன் எதிர்கொண்டு நெருப்பாற்றில் நீந்தி புடம் போட்ட தங்கமாக எழுந்து நிற்கிற இயக்கம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. மீது ஈழப் பிரச்சினைக்காகக் குற்றம் சுமத்தி, கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியதை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களும் ஒரு பொருட்டாகக் கூட நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.கவினருக்கு உண்மையாகவே ஈழத்தமிழர் மீது அக்கறை இருக்குமென்றால், வாஜ்பாய் அவர்கள் சார்ந்திருந்த பா.ஜ.க.வைக் கண்டித்துதானே முதற்கட்டமாகப் பொதுக்கூட்டம் - போராட்டம் நடத்தியிருக்க வேண்டும் என்றும், தி.மு.க. மீது உங்களால் அப்படி குற்றம் சுமத்த முடியுமென்றால், நீதிமன்றத்தில் சென்று நிரூபித்துக் காட்டுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க. என்பது விமர்சனங்களையும், பழிச்சொற்களையும், நெருக்கடிகளையும் துணிவுடன் எதிர்கொண்டு நெருப்பாற்றில் நீந்தி புடம் போட்ட தங்கமாக எழுந்து நிற்கிற இயக்கம் என்றும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Classic Right sidebar தி.மு.க., DMK, MK Stalin, மு.க.ஸ்டாலின், ADMK, அ.தி.மு.க அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zupXRb
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment