Saturday, September 29, 2018

சென்னையில் இன்று எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா தமிழக அரசு சார்பில் சென்னையில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

அதிமுக நிறுவனரும்,முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நடைபெற்ற போது, நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அந்த வகையில் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா தமிழக அரசு சார்பில் சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ள விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த விழாவுக்காக சென்னை அண்ணா சாலை, பசுமை வழி சாலை, கிண்டி ஆகிய பகுதிகளில் சாலை ஓரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள், கட்டவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்புக்காக காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட உள்ளனர்.

Classic Right sidebar ADMK, MGR 100, Tamilnadu, தமிழக அரசு, அதிமுக, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, முதலமைச்சர் பழனிசாமி, TN CM Palaniswami அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OnPB2r
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment