Sunday, September 30, 2018

MGR நூற்றாண்டு நிறைவு விழா : MGR சிறப்பு அஞ்சல் தலை, நிறைவு விழா மலர் வெளியீடு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில்,  எம்.ஜி.ஆரின் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா மலர் வெளியிடப்பட்டது.

சென்னை நந்தனத்தில் உள்ள ymca மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு  நிறைவு விழா கோலகலமாக நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், நாடாளுமன்ற மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை, அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர். 

விழா மேடைக்கு வந்தவுடன், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவப் படங்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். 

பின்னர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, எம்.ஜி.ஆரின் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நூற்றாண்டு விழா மலர் ஆகியவற்றை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுகொண்டார்.

 

Classic Right sidebar எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, அஞ்சல் தலை, MGR Centenary அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DGQmPP
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment