சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 1,500 மாணவர்கள் ஒன்றிணைந்து காந்தியின் உருவத்தை வடிவமைத்து சாதனை படைத்தனர்.
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளி குழுமம் சார்பில் பள்ளி மைதானத்தில் 1500 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 2500 மெழுகுவர்த்திகளை ஏற்றி மகாத்மா காந்தியின் உருவத்தை வடிவமைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டு மகாத்மா காந்தியின் வழியை பின்பற்றி வளமான சமுதாயம், பெண்களின் முழு பாதுகாப்பு, ஜாதி மத மொழி இன பாகுபாடின்றி திகழும் சமுதாயம் அமைப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.
Classic Right sidebar சென்னை, Chennai, Kolathur, கொளத்தூர், மகாத்மா காந்தி, Mahatma Gandhi தமிழகம் 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NaQ6br
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment