Sunday, September 30, 2018

மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன - ராஜ்நாத் சிங்

ரஃபேல் ஒப்பந்தம் பற்றிய ரகசிய விவரங்களை பகிரங்கமாக தெரிவிக்க வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழி நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் விமர்சித்துள்ளார். 

அரியானா மாநிலம், அம்பாலா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழச்சி ஒன்றில் பேசிய அவர், ரஃபேல் ஒப்பந்தம் தற்போதைய மோடி ஆட்சியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டது அல்ல, என்றும் முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியின் நீட்சியே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது எனவும் கூறினார்.  

மேலும், ரஃபேல் ஒப்பந்தம் பற்றிய ரகசிய விவரங்களை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது சாத்தியமில்லாதது என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

 

Classic Right sidebar ராஜ்நாத் சிங், Rajnath Singh அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P27Kjw
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment