Sunday, September 30, 2018

ரோஹித் இடம்பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது : சவுரவ் கங்குலி

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா இடம் பெறாதது அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2 டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், ஆசிய கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுக்கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் போன்ற அனுபவ வீரர்கள் பெயர் இடம்பெறவில்லை. 

இந்நிலையில், ரோஹித் சர்மா பெயர் வெஸ்ட் இண்டீஸ் உடனான டெஸ்ட் தொடரில் இடம் பெறாதது அதிர்ச்சி அளிப்பதாக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள கங்குலி, ஒவ்வொரு முறையும் டெஸ்ட் அணி அறிவிக்கப்படும்போது ரோகித் சர்மா பெயர் இடம் பெறாமல் போவது ஆச்சரியமாகவும், அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாகவும், ரோஹித் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெறுவது வெகு தொலைவில் இல்லை எனவும் பதிவிட்டுள்ளார். ரோஹித் சர்மா கடைசியாக தென்னாப்பிரிக்காவுடன் கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

 

Classic Right sidebar  சவுரவ் கங்குலி, ரோஹித் ஷர்மா, வெஸ்ட் இண்டீஸ், கிரிக்கெட், Sourav Ganguly, Rohit Sharma, West Indies. Cricket விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P6wqHi
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment