Sunday, September 30, 2018

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக்., ஹெலிகாப்டர்

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின் ஹெலிகாப்டர் ஒன்று அத்துமீறி நுழைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் செக்டார் பகுதியில் பாகிஸ்தானின் ஹெலிகாப்டர் ஒன்று, அத்துமீறி நுழைந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் டாங்தார் பகுதியில் நடந்த தாக்குதலில் , 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 

மேலும் பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலைக் கண்டித்து, நியூயார்க்கில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கண்டிப்பு தெரிவித்திருந்த நிலையில்  இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் ராணுவத்தின் ஹெலிகாப்டர் நுழைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே இந்திய ராணுவம் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்த முயற்சித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Classic Right sidebar Pakistan, helicopter, Indian airspace, jammu, Kashmir, இந்தியா, பாகிஸ்தான், ஹெலிகாப்டர் இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zGnx2e
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment