Saturday, September 29, 2018

நீர்நிலைகளை ஆக்கிரமித்த கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்க தடை

குளம், ஏரி, சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தில், புதிய மின் இணைப்பு வழங்குதல், மின் கட்டணம் நிர்ணயித்தல், மின்சாரம் கொள்முதல், கொள்முதலுக்கான கட்டணம் நிர்ணயித்தல், மின்உற்பத்திக்கான நிலக்கரி வாங்குதல் என அனைத்தும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியே நடந்து வருகிறது.

மேலும் மின் இணைப்பு வழங்குவதற்கும் சில விதிமுறைகளை ஆணையம் வகுத்துள்ள நிலையில், தற்போது  மாவட்ட கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரிய தலைமை பொறியாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் குளம், ஏரி, சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Classic Right sidebar தமிழ்நாடு மின்வாரியம், TNEB, Tamilnadu, தமிழகம், மின் இணைப்பு, EB Connection தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IpxIe0
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment