Saturday, September 29, 2018

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை - RTI தகவல்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. 

மதுரையை சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் ஹக்கிம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இந்த தகவலை பெற்றுள்ளார். அதில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை வர மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக இதுவரபை எந்த நிறுவனத்திற்கும் டெண்டர் விடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Classic Right sidebar மதுரை, madurai, AIIMS, எய்ம்ஸ், RTI, தகவல் அறியும் உரிமை சட்டம், தோப்பூர், Thoppur தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Ogqbnt
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment