Sunday, September 30, 2018

ஈரோடு நம்பியூரில் கனமழை : குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் 

கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள நம்பியூரில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள நம்பியூரில் நேற்று இரவு பெய்த கனமழையால் செட்டியம்பதி குளம் முற்றிலும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் பெரியார் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

வீடுகளை சுற்றிலும் 3 அடிக்கு மேல் நிற்கும் வெள்ள நீரால் 400க்கும் மேற்பட்டோர் சமுதாய நலக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் அப்பகுதியில் கடுமையான சுகாதாரக் கேடு நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Classic Right sidebar கனமழை, ஈரோடு, வெள்ளம், Rain, Erode, Flood தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Oovn8x
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment