மெரினா கடற்கரையில் சிவாஜி கணேசனுக்கு சிலை வைக்க கோரிக்கை வந்தால் அதனை தமிழக அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல், சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, சென்னை மெரினா கடற்கரையில் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைக்கக்கோரி கோரிக்கை வந்தால், அதனை அரசு பரிசீலிக்கும் என தெரிவித்தார்.
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OZkPtD
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment