Saturday, September 29, 2018

ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் நடைமுறையைத்தான் பா.ஜ.க. பின்பற்றியது - நிர்மலா சீதாராமன் விளக்கம்

ரஃபேல் விவகாரத்தில் 4 முறை நாடாளுமன்றத்தில் பதில் அளித்திருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை ஆலந்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ரஃபேல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விக்கு முறையாக பதில் அளித்திருக்கிறோம் எனக்கூறினார்.

ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் நடைமுறையைத்தான் பா.ஜ.க-வும் பின்பற்றியது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். 

ரஃபேல் ஒப்பந்தம் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்த நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். தங்களது ஆட்சிக் காலத்தில் குண்டு துளைக்காத கவசம் கூட வாங்காத காங்கிரஸ், ஆட்சிப் பொறுப்பை விட்டுச் செல்லும்போது துப்பாக்கிகளுக்கு தோட்டா இல்லாமலும், பீரங்கிகளுக்கு குண்டு இல்லாமலும் படைகள் இருக்கின்றன என விமர்சிக்கப்படும் நிலையில் வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டினார்.

Classic Right sidebar Rafale Deal, Nirmala sitharaman, BJP, India, Defence Minister, Congress, மத்திய பாதுகாப்புத்துறை, நிர்மலா சீதாராமன், ரஃபேல் விவகாரம், காங்கிரஸ் இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ItzZoM
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment