வேலூர் மத்திய சிறையில் உள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, உடல்நலக்குறைவு காரணமாக, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, மருத்துவர்களின் பரிந்துரைப்படி, திருமுருகன் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இரைப்பை மற்றும் பெருங்குடல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். முன்னதாக, சிறையிலேயே திருமுருகன்காந்தி மயங்கி விழுந்ததாகவும், அதன்பின்னரே மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Classic Right sidebar மே 17 இயக்கம், வேலூர் மத்திய சிறை, திருமுருகன் காந்தி, May 17 Movement, Vellore Central Prison, Thirumurugan Gandhi தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y8nk5Z
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment