Sunday, September 30, 2018

சர்வதேச நிறுவனங்கள் சென்னையில் தொழில் செய்ய விருப்பம் - முதலமைச்சர் பழனிசாமி

சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு முதற்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை நந்தனத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக தொண்டர்கள் என அனைவரும் பங்கேற்றனர். 

இந்த விழாவின் போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் வகையில் சென்னையிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்கு மாதவரத்தில் 95 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து முனையம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் நடத்த முடிவு செய்து பல்வேறு துரித முன்னேற்பாடுகளை அரசு எடுத்து வருவதாக கூறிய அவர், பல சர்வதேச நிறுவனங்கள் சென்னையில் தொழில் செய்ய வருவார்கள்கள் எனவும் கூறினார்.

 

Classic Right sidebar எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா, பழனிசாமி, Palaniswami, MGR Centenary அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xQukoq
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment