Saturday, September 29, 2018

ஜப்பானில் இன்று மாலை கரையைக் கடக்கிறது டிரையாமி புயல்

ஜப்பானில் அச்சுறுத்தி வரும் சூப்பர் டைபூன் டிரையாமி புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜப்பானில் உருவாகியுள்ள டிரையாமி புயலால் டோக்கியோவின் நாரிடா, ஹனிடா உள்ளிட்ட பகுதிகளில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்துள்ளன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இது வரை கனமழையால் 17 பேர் காயமடைந்துள்ளனர். இன்று மாலை டோக்கியோ நகரையும், நாளை வட ஜப்பானையும் இந்தப் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாறு காணாத வேகத்தில் வீசும் இந்த புயலில், இருந்து காக்கும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Classic Right sidebar ஜப்பான், japan, சூப்பர் டைபூன் டிரையாமி புயல், Typhoon Trami உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QjrBee
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment