தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நாளை கையெழுத்தாக உள்ளது.
இந்தியாவில் 55 இடங்களை அடையாளம் கண்டு, அங்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதற்கான நிறுவனங்களையும் மத்திய அரசு தேர்வு செய்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும் மற்றும் காவிரி டெல்டா பகுதியில் இரு இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது.
அதன்படி ஓ.என்.ஜி.சி. எனப்படும் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துக்கு சிதம்பரத்திலும், வேதாந்தா நிறுவனத்துக்கு மற்ற இரு இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் நாளை கையெழுத்தாக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் என்ற இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் புதிதாக 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Classic Right sidebar Tamilnadu, central government, HydroCarbon, India, இந்தியா, மத்திய அரசு, ஹைட்ரோ கார்பன், தர்மேந்திர பிரதான், Dharmendra Pradhan, ONGC, Vedanta தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2N9BskF
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment