சபரிமலையில் 18-ந் தேதி முதல் பெண்களுக்கு அனுமதியளிப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் பினராய் விஜயனுடன் தேவஸ்தானம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. நீண்ட காலமாக இருந்து வரும் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமன் உள்ளிட்டோர் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு விசாரித்து நேற்று முன்தினம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இதனால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 17-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 22-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
இந்நிலையில், வரும் 18-ந் தேதி முதல் பெண்களுக்கு அனுமதியளிப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் பினராய் விஜயனுடன் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு இன்று ஆலோசனை நடத்துகிறது.
Classic Right sidebar சபரிமலை அய்யப்பன் கோவில், Kerala, SabariMala, pinarayi vijayan, பினராய் விஜயன், கேரளா தமிழகம் 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P14tkb
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment