Sunday, September 30, 2018

25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்

நாகர்கோவிலில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 1973ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை, ஒன்றாக படித்த முன்னாள் மாணவர்கள்  38 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் பள்ளிகளில் சந்தித்த கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது. 

அப்போது முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, தங்களுக்கு பாடம் கற்பித்து தந்த ஆசிரியர்களையும் அழைத்து மேடையில் அமரவைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தி கவுரவித்தனர். அப்போது ஒவ்வொருவம் தங்களின் பழைய நினைவுகளை நினைவுகூர்ந்து, மகிழ்ச்சியைப்பரிமாறிக்கொண்டனர்.

இதேப்போன்று மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை கணிதவியல் துறையில், 90ஆம் ஆண்டுமுதல் 93ஆம் ஆண்டுவரை படித்த  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. 

இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதையடுத்து முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர், அக்கல்லூரியின்  4 மாணவர்களுக்கு புத்தகம் கல்வி உதவி மற்றும் கல்லூரி்  வளர்ச்சிக்கு நிதியுதவி அளித்தனர்.

 

Classic Right sidebar நாகரிகோவில்,  Nagarkovil தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xNkP9Q
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment