Friday, September 28, 2018

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டதால் மக்கள் பீதி

இந்தோனேஷியாவில்  சக்திவாய்ந்த நிலநடுக்கமும் , சுனாமி அலைகளும்  தாக்கியதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர்.

இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுலேவேசியில்  வடகிழக்காக பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வெளியே ஓடிவந்தனர். முதல்கட்டமாக நேரிட்ட நிலநடுக்கத்தில் 9 கிராமங்கள் பாதிக்கப்பட்டன,  டாங்லாவில் சுனாமி தாக்கியதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், ஒருவர் பலியாகி, 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Classic Right sidebar உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Qcsy82
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment