தஞ்சையில் ரமணா திரைப்பட பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை அளித்ததாக தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் ஈசனூரை சேர்ந்த சேகர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றியவர். வயிற்று வலி காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி சேர்க்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளனர். கூடுதலாக 2 லட்சம் ரூபாய் கேட்டவுடன் சந்தேகமடைந்த உறவினர்கள், சேகரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் உயிரிழந்து 3 நாட்கள் ஆவதாக தெரிவித்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உயிரிழந்ததை மறைத்து பணத்தை பறித்து ஏமாற்றியதாக தனியார் மருத்துவமனை மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Classic Right sidebar தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xVxiaA
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment