குடிசை மாற்று வாரிய வீடு வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் 5 கோடி ரூபாய் சுருட்டிய போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஈக்காட்டுதாங்கல் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த உதயபாஸ்கர் என்பவர் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உதயபாஸ்கர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் மத போதகர் ஜெபசிங் என்பவர் மூலம் அறிமுகமான ஜெகதீஷ் என்ற ரவிக்குமார் என்பவர், செம்மஞ்சேரியில் கட்டப்பட்டு வரும், குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் வாங்கித்தருவதாகக் கூறி 2,300 பேரிடம் ரூ.5 கோடி மோசடி செய்ததாக கூறியிருந்தார்.
அதன் படி மத்திய குற்றப்பிரிவு, மோசடி தடுப்புப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஜெகதீஷ் என்ற ரவிக்குமார் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி என்றும், படித்துவிட்டு வேலை இல்லாமல் சுற்றித்திரிந்த அவர் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வலம் வந்து பலரிடம் மோசடி செய்ததும் தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், அவர் வலம் வந்த சுழல் விளக்கு பொருத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
Classic Right sidebar Chennai, சென்னை, நில மோசடி, போலி அதிகாரி தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QkGOf5
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment