Wednesday, September 26, 2018

தென்மேற்கு பருவமழை முடிவு; வடகிழக்கு பருவமழை தொடக்கம்

வருகிற 29-ந்தேதியுடன் தென்மேற்கு பருவ மழை முடிவடையும் நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழையால் வட மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இமாச்சல பிரதேசத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தொடர் மழை பெய்கிறது. கடந்த 4 தினங்களில் அங்கு இயல்பை விட 33 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. வருகிற 29-ந்தேதியுடன் தென்மேற்கு பருவ மழை முடிவடையும்  அன்றில் இருந்து வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது.

Classic Right sidebar வடகிழக்கு பருவமழை, வானிலை ஆய்வுமையம் தமிழகம் வடகிழக்கு பருவமழை, வானிலை ஆய்வுமையம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OSP1Xg
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment