Wednesday, September 26, 2018

சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்யக் கூடாது என காவல் துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை - சேலம் இடையிலான 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தடைகோரி, பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், விவசாயிகள், நில உரிமையாளர்கள் என  பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகள், நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சேலத்தில் இத்திட்டத்திற்கு எதிராக  இன்று கையெழுத்து இயக்கம் நடத்திய 10-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது என தெரிவித்த நீதிபதிகள், இத்திட்டத்திற்கு எதிராக அமைதியாக, ஜனநாயக வழியில் போராடுபவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்க  கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையையும் வரும் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Classic Right sidebar சேலம், 8 வழிச்சாலை, சென்னை உயர்நீதிமன்றம், salem, Madras Highcourt தமிழகம் சேலம், 8 வழிச்சாலை, சென்னை உயர்நீதிமன்றம், Salem, Madras Highcourt 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Ij19P2
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment