Thursday, September 27, 2018

புதுச்சேரியில் மருந்து கடைகளை மூட தடை

புதுச்சேரியில் மருந்து கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய அளவில் பாரத் கெமிஸ்ட் பந்த் நடைபெற உள்ளது. புதுச்சேரியிலும் மருந்து கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என புதுச்சேரி மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் சவுத்ரி தற்போது ஒரு ஆணை வெளியிட்டுள்ளார் அதில்,  அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் மருந்துகள் வருவதால், புதுச்சேரியில் மருந்து கடைகள், பார்மசி உரிமையாளர்கள் 28ம் தேதியன்று கடைகளை மூடக்கூடாது. மீறி மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Classic Right sidebar புதுச்சேரி, மருந்து கடை, Puducherry, Medical Shop இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OWQjkc
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment