Thursday, September 27, 2018

காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை : 3 தீவிரவாதிகள் பலி

ஜம்மு காஷ்மீரில் 3 இடங்களில் நடைபெற்ற கடும் துப்பாக்கிச்சண்டையில் 3 தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில், பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.

அனந்த்நாக் மாவட்டம் தூரு சாகாபாத் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். 

இதனை தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில், தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த மோதலில், பாதுகாப்புப்படை வீரர் வீரமரணமடைந்தார்.

இதேபோல் புட்காம் மாவட்டம் பான்சான் கிராமத்தில், மசூதிக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாகிக்சூட்டில், 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  

மேலும், தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற்ற மற்றொரு துப்பாக்கிச்சண்டையில், அந்த பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார். இதனையடுத்து, தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகரில் செல்போன் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.

Classic Right sidebar ஜம்மு காஷ்மீர், தீவிரவாதி, Jammu Kashmir, Terrorist இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QefKOf
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment