Friday, September 28, 2018

காங்.ஆட்சிக்கு வந்தால் பயிர்க்கடன்கள் ரத்து - ராகுல்காந்தி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாயிகளின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்

மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ரேவா நகரில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடனை பிரதமர் மோடி தன்னுடைய 15 தொழிலதிபர்கள் நண்பர்களுக்குக் கடன் தள்ளுபடியாக அறிவித்திருக்கிறார் என்று குற்றஞ்சாட்டினார். நாட்டில் உள்ள சிறு, குறு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுத்துவிட்டது என்றும் அவர் புகார் கூறினார். 

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களுக்குள் விவசாயிகளின் பயிர்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த ராகுல்காந்தி, 11-வது நாளில் விவசாயிகளுடைய பயிர்க்கடன் இருக்காது என உறுதியளித்தார்.
 

Classic Right sidebar இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y25ly2
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment