ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை ட்விட்டரில் விமர்சித்ததற்காக பிரபல நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளராக உள்ள ரம்யா, டுவிட்டரில் ரபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்துள்ளதுடன், அவரது புகைப்படத்தையும் கேலி செய்யும் வகையில் வெளியிட்டுள்ளார்.
ரம்யாவின் டுவிட்டர் பதிவு, பிரதமர் மோடியை குறிவைத்து அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாக, உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் சையது ரிஸ்வான், Gomitnagar காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், ரம்யா மீது உத்தரப்பிரதேச போலீசார் தேசதுரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Classic Right sidebar ரம்யா, காங்கிரஸ், தேசதுரோகம், Ramya, actress, Congress MP இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OcQaMt
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment