Friday, September 28, 2018

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு

நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கிராம சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என்றும் கமல் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் சபரிமலை தீர்ப்பு குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர் கடவுள் வழியில் அனைவருமே சமம் தான் என்றும், உச்சநீதிமன்ற தீர்பை வரவேற்பதாகவும் கூறினார். மேலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

Classic Right sidebar கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம், கிராமசபை கூட்டம், kamalhaasan, Makkal Needhi Maiam அரசியல் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம், கிராமசபை கூட்டம், Kamalhaasan, Makkal Needhi Maiam 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xXtrKd
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment