Friday, September 28, 2018

புதிய பாணியில் அரசியல் படம் 'நோட்டா': நடிகர் சத்யராஜ் புகழாரம்

நடிகர் மணிவண்ணனைப் போல புதிய பாணியை அரசியல் படத்தில் இயக்குநர் ஆனந்த் சங்கர்  புகுத்தியுள்ளதாக நடிகர் சத்யராஜ் கூறியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் பிரபு நாயகனாக நடித்த அரிமா நம்பி படத்தின் மூலமாக கோலிவுட் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமான ஆனந்த் சங்கர் அடுத்ததாக விக்ரம், நயன்தாரா நடித்த இருமுகன் படத்தை இயக்கிருந்தார் இந்த இரு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவை நாயகனாக வைத்து உருவாக்கியுள்ள படம் ‘நோட்டா’.

தமிழ், தெலுங்கிகு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக மெஹ்ரீன் நடித்துள்ளார். இதன் டீஸர் மற்றும் ட்ரைலர்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மணிவண்ணன் இயக்கிய 'அமைதிப்படை', கே.வி.ஆனந்த் இயக்கிய 'கோ' போன்ற படங்கள் அப்போதைய நடப்பு அரசியலை சூசகமாக வெளிப்படுத்தியதுபோல் நோட்டாவிலும் புதிய அரசியல் பாணியை இயக்குநர் அறிமுகப்படுத்தியுள்ளதாக நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

கோலிவுட்டில் சர்கார், இந்தியன் 2, என்.ஜி.கே, மற்றும் நோட்டா போன்ற அரசியல் படங்கள் அடுத்தடுத்து உருவாவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நோட்டா வருகிற 5ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

Classic Right sidebar நோட்டா, சத்யராஜ், சினிமா, NOTA, Sathyaraj, Tamil Cinema சினிமா நோட்டா, சத்யராஜ், சினிமா, NOTA,Sathyaraj, Tamil Cinema 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P0lpaQ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment