மதுரை ஆதின மடத்தின் 293வது ஆதினமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தாவின் நியமனம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பழமைவாய்ந்த மதுரை ஆதின மடத்தின், 292-வது குரு மகா சன்னிதானமான அருணகிரி நாதர், கடந்த 2012ம் ஆண்டு மடத்தின் அடுத்த ஆதினமாக நித்தியானந்தாவை நியமனம் செய்தார்.
இந்த நியமனத்துக்கு நிரந்தர தடை விதிக்கக்கோரி, ஆதினம் மடத்தின் பக்தர்கள் மணிவாசகம், சாமி தியாகராஜன் ஆகியோர் மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக நித்யானந்தா தாக்கல் செய்த மனுவும், கடந்த 2014ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து, இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா உயர் நீதிமன்ற கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், மதுரை ஆதின மடத்தின் 293வது ஆதினமாக நித்யானந்தாவை நியமித்தது செல்லும் என உத்தரவிட்டார். மேலும், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் நீதிபதி ரத்து செய்வதாக தீர்ப்பளித்தார்.
Classic Right sidebar மதுரை, நித்யானந்தா, ஆதினம், madurai தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xQOGNC
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment