இணைய வழி மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்துகடைகள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இணைய வழி மருந்து விற்பனையை மத்திய அரசு அனுமதித்தால் போலியான மற்றும் காலாவதியான மருந்துகள் உலவும் எனக்குற்றம்சாட்டி அனைத்திந்திய வேதியியல் மற்றும் மருந்துகள் அமைப்பு இன்று நாடு முழுவதும் மருந்துகடைகளை அடைத்து வேலைநிறுத்தப் போராட்டம் செய்ய அழைப்பு விடுத்திருந்தது.
இதுதொடர்பான வேலைநிறுத்தப்போராட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் மருந்துகடைகள், அடைக்கப்பட்டிருக்கும் என அதன் மாநில அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அடையாள வேலைநிறுத்தப்போராட்டம் இன்று அதிகாலை தொடங்கி, மாலை 6 மணிவரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் மருந்து கடைகள் வழக்கம் போல் செயல்படும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
Classic Right sidebar மருந்து விற்பனை, ஆன்லைன், மருந்து கடை போராட்டம், வேலை நிறுத்தம், Medical Shop, online Medicine, Protest, strike இந்தியா
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xHUGZZ
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment