Thursday, September 27, 2018

குடும்பத் தகராறு காரணமாக 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

சேலம் அருகே குடும்பத் தகராறு காரணமாக தனது மூன்று குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் அருகே உள்ள பூலாவரி கிராமத்தை அடுத்துள்ள கொழிஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். கூலி தொழிலாளியான இவருக்கு ஜெயா என்ற மனைவியும், மூன்று குழந்தைளும் இருந்தனர்.  கடந்த சில மாதங்களாக கணவன் – மனைவியிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் ஜெயா தனது செல்போனில் சிலரிடம் நீண்ட நேரமாக பேசி வந்துள்ளதாகவும், இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜெயாவின் செல்போனை பறித்து கொண்டு சென்றுள்ளார். இந்த நிலையில்  வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பிய லட்சுமணன், வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து காவல் நிலையத்திலும் லட்சுமணன் தகவல் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில்  வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் தேடியபோது ஜெயா மற்றும் 3 குழந்தைகளின் உடல்களை  காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

கணவருடன் ஏற்பட்ட தகராறில், இளம்பெண் தனது மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Classic Right sidebar salem, Family Problem, Suicide, சேலம், குடும்ப தகராறு, தற்கொலை தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OWuKQT
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment