தமிழக இந்துசமய அறநிலையத்துறை ஊழியர்களின் குடும்ப பெண்களை இழிவாக பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்.ராஜாவை கண்டித்து, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களின் சார்பில், நாளை நடைபெறவிருக்கின்ற நியாயமான உண்ணாநிலைப் போராட்டத்திற்கு, தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளையும், ஊழியர்களையும் தரக்குறைவாகவும், அவர்களது குடும்ப பெண்கள் குறித்து அநாகரிகமாகவும், இழிவாகவும் பேசிய எச் ராஜாவை, இதுவரை தமிழக காவல்துறை கைது செய்யாமல் பாரபட்சமான முறையில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் அனைவரையும் கொச்சைப்படுத்திப் பேசி வரும் ஹெச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும்,
இந்து சமய அறநிலையத்துறையில் ஒரு சுமூகமான நிர்வாகப்பணிச் சூழல் ஏற்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அ.தி.மு.க அரசு எடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Classic Right sidebar தமிழக இந்துசமய அறநிலையத்துறை, எச்.ராஜா, பா.ஜ.க., தி.மு.க., DMK, MK Stalin, மு.க.ஸ்டாலின் அரசியல்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DKePUL
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment