கடந்த 2008ம் ஆண்டு ‘காதலில் விழுந்தேன்’ என்ற படம் மூலம் ஹீரோ, ஹீரோயினாக தமிழ் சினிமாவுக்குள் வந்த நகுலும் சுனைனாவும் ‘எரியும் கண்ணாடி’ என்ற புதிய படத்தின் மூலம் மீண்டும் ஒன்று சேர உள்ளனர்.
எரியும் கண்ணாடி என பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு சச்சின் தேவ் என்பவர் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா, வைரமுத்துவின் கூட்டணியில் பாடல்களும், இசையும் உருவாக உள்ளது. விரைவில் படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
காதலில் விழுந்தேன் படத்திற்கு பின் நகுலும் சுனைனாவும் மாசிலாமணி என்ற படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zBzF4g
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment