ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு மே 15ம் தேதி சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில், 2007ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறையும் இந்த வழக்கின் நிதி மோசடி குறித்த அம்சங்களை விசாரித்து வருகிறது. கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்கு ப.சிதம்பரம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு ஆகஸ்ட் 1-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரத்தை கைது செய்ய செப்டம்பர் 28ம் தேதி வரை தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை அக்டோபர் 25 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Classic Right sidebar ஐஎன்எக்ஸ், மத்திய அமைச்சர், டெல்லி உயர்நீதிமன்றம் இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xNPy6r
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment