Friday, September 28, 2018

திருச்சியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 40 பைக்குள் பறிமுதல்... பலே திருடன் சிக்கியது எப்படி?

திருச்சியில் இரு சக்கர வாகன திருடனிடம் இருந்து 40 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சமயபுரம் அருகே காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் சந்தேகத்திற்கிடமாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

அந்த நபர் திருவாரூரை சேர்ந்த ராஜ்குமார் என்பதும் லால்குடி, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடி விற்று வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Classic Right sidebar இருசக்கர வாகனம், வாகன திருட்டு, திருச்சி தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zDT1Gf
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment