அதிமுக அரசை தவறாக பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று சொல்வதற்கு பதில் தவறுதலாக நாக்கை அறுத்துவிடுவேன் என்று பேசிவிட்டதாக தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு விளக்கமளித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு திமுக-காங்கிரஸ் கட்சிகளே காரணம், என கண்டன பொதுக்கூட்டம் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. தஞ்சாவூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, “தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யாரை பார்த்து லஞ்ச ஆட்சி, குற்ற ஆட்சி என தவறாக பேசுகிறீர்கள்? தவறாக பேசிய உங்கள் நாக்கை அறுத்து விடுவோம். ஜாக்கிரதையாக இருங்கள் என தெரிவித்துக் கொள்கிறேன்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசை தவறாக பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று சொல்வதற்கு பதில் தவறுதலாக நாக்கை அறுத்துவிடுவேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
Classic Right sidebar துரைக்கண்ணு, அதிமுக, Duraikannu, ADMK அரசியல்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NIQZNA
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment