சென்னை விமானநிலையத்துக்குள் நுழையும் டாக்ஸிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அதன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
சென்னை விமானநிலையத்திற்கு வரும் பயணிகளை அழைக்கவோ, வழியனுப்பவோ தங்கள் சொந்த வாகனங்களில் செல்லும் பயணிகளுக்கு நுழைவுக்கட்டணம் கிடையாது எனவும், கால் டாக்ஸிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் விமானநிலைய இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கால்டாக்ஸி ஓட்டுநர்கள் ஒவ்வொரு பயணிகளிடம் இருந்தும் 60 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்க வாய்ப்பு இருக்கிறது. அதேப்போல் சென்னை விமானநிலைய வளாகத்தில் பார்க்கிங் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அரை மணிநேர பார்க்கிங்கிற்கு பேருந்துக்கு 50 ரூபாயும், காருக்கு 40 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 120 நிமிடங்களுக்கு, பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கு 110 ரூபாயும் , கார் போன்ற மிதகனரகவாகனங்களுக்கு 100 ரூபாயும், இருசக்கரவாகனங்களுக்கு 25 ரூபாயும் பார்க்கிங் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Classic Right sidebar தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OkmqgF
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment