Friday, September 28, 2018

கொரிய ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் சாய்னா நேவால் போராடி தோல்வி

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை ஒகுஹாராவிடம் இந்தியாவின் சாய்னா நேவால் போராடித் தோல்வி அடைந்தார்.

தென்கொரியா நாட்டின் சியோல் நகரில் கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதிப்போட்டியில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாய்னா நேவால், 3-வது இடத்தில் உள்ள நஸோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 21க்கு 15 என்ற புள்ளிகள் கணக்கில் சாய்னா கைப்பற்ற, 2-வது செட்டை ஒகுஹாரா கைப்பற்றி பதிலடி கொடுத்தார். பின்னர் வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டின் தொடக்கத்தில் சாய்னா முன்னிலையில் இருந்தார்.

ஆனால், அவர் சில தவறான ஷாட்கள் அடித்ததால், 20க்கு 22 என வெற்றியை கோட்டைவிட்டார். இறுதியில், 2க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஒகுஹாரா அரையிறுதிக்கு முன்னேறினார்.

Classic Right sidebar சாய்னா நேவால், பேட்மிண்டன், கொரிய ஓபன், saina nehwal, Badminton, Korea Open விளையாட்டு சாய்னா நேவால், பேட்மிண்டன், கொரிய ஓபன், Saina Nehwal, Badminton, Korea Open 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2R7xtbJ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment