Wednesday, September 26, 2018

எம்.எல்.ஏ கருணாஸை போலீஸ் காவல் எடுக்க அனுமதி மறுப்பு

முதலமைச்சர் மற்றும் காவல்துறையை அவதூறாக விமர்சித்த வழக்கில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் மற்றும் காவல்துறையை அவதூறாக விமர்சித்த வழக்கில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான கருணாஸ் கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்..

இந்நிலையில் , கருணாஸை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சென்னை அல்லிகுளம் நீதிமன்றம் போலீஸ் காவலுக்கு  அனுமதி மறுத்ததுடன் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.

Classic Right sidebar கருணாஸ், சட்டமன்ற உறுப்பினர், திருவாடானை, Karunas, MLA அரசியல் கருணாஸ், சட்டமன்ற உறுப்பினர், திருவாடானை, Karunas, MLA 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QYGPX9
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment