சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என்றும் மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்திற்கு தடை விதிக்ககோரியும் இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், கான்வில்கர், சந்திராசூட், இந்து மல்கோத்ரா ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல என்றும் சபரிமலை வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. நீண்ட காலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருவதாகவும் சபரிமலை கோயில் பக்தர்கள் மட்டும் தனி மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல எனவும் உச்சநீதிமன்றம் கூறியது.
இதனைதொடர்ந்து, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Classic Right sidebar சபரிமலை, உச்சநீதிமன்றம், சபரிமலை அய்யப்பன், SupremeCourt, SabariMala இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QgdshL
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment