ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் இந்திய அணி வெற்றிபெறாததற்கு அம்பயரின் தவறான முடிவுகளும் காரணம் என கேப்டன் தோனி சூசகமாக கூறியுள்ளார்.
ஆசியக்கோப்பைத் தொடரில், நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் - இந்தியா இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. இதில், இந்திய அணி பேட்டிங் செய்தபோது, நடுவரின் தவறான முடிவால் கேப்டன் தோனி 8 ரன்களில் LBW முறையில் அவுட் என அறிவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, தினேஷ் கார்த்திக் 44ரன்கள் எடுத்திருந்தபோது, நடுவரின் மற்றொரு தவறான முடிவால் LBW முறையில் அவுட் என அறிவிக்கப்பட்டார். போட்டி முடிந்தபின், பரிசளிப்பு விழாவில் பேசிய கேப்டன் தோனி, அணி வெற்றி பெற முடியாததற்கு காரணம், சில ரன் அவுட்களும், சில தவறான முடிவுகளும் என்று கூறினார்.
மேலும், அதைப் பற்றி கூறினால் தனக்கு அபராதம் விதிப்பார்கள் என நடுவரின் தவறான முடிவுகளை அவர் சூசகமாக விமர்சனம் செய்தார்.
Classic Right sidebar ஆசியக்கோப்பை, தோனி, ஆப்கானிஸ்தான், Asia Cup, M.S.Dhoni, Afganistan விளையாட்டுfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2N1Uauz
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment