உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணைகளை நேரலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் நடைபெறும் அனைத்து வழக்கு விசாரணைகளையும் நேரலையாக ஒளிபரப்பவும், வீடியோ பதிவுகள் பொதுமக்களுக்கும், வழக்குதாரர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வெவ்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
விசாரணை நடவடிக்கைகளின் வெளிப்படைத் தன்மை உறுதி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து மனுக்களையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு விசாரித்தது. இதுகுறித்து விரிவான அறிக்கையையும் மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணைகளை சில கட்டுப்பாடுகளுடன் நேரலையாக ஒளிபரப்ப அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
Classic Right sidebar உச்சநீதிமன்றம், நீதிமன்றம், வழக்கு விசாரணை, Supreme Court இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xQaQzr
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment