Wednesday, September 26, 2018

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கூடாது; சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் ஆளுநரிடம் மனு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கூடாது என்பதை வலியுறுத்தி, ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின்பொது உயிரிழந்த  13 பேரின் குடும்பத்தினர் ஆளுநரை சந்தித்து  மனு அளித்தனர்.

1991 ஆம் ஆண்டு நடந்த ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் ராஜீவ் காந்தி உட்பட 15 பேர் உயிரிழந்தனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு பரிந்துரையின்படி ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் 7 பேரையும் விடுவிக்க ஆளுநரிடம் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரும் இன்று சென்னை ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை நேரில் சந்தித்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க கூடாது என மனு அளித்தனர்.

Classic Right sidebar பேரறிவாளன், பன்வாரிலால் புரோஹித், ராஜீவ் காந்தி, Perarivalan, Rajeev Gandhi தமிழகம் பேரறிவாளன், பன்வாரிலால் புரோஹித், ராஜீவ் காந்தி, Perarivalan, Rajeev Gandhi 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Qab3Fj
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment