அவதூறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
முதலமைச்சர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கடந்த 23-ம் தேதி அவரை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கு உள்பட 2 வழக்குகளில் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Classic Right sidebar அவதூறு வழக்கு, கருணாஸ், mla Karunas, Egmore Court, எழும்பூர் நீதிமன்றம், Chennai, ADMK தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DwNFQL
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment