Wednesday, September 26, 2018

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்களுக்கு வரி உயர்வு

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏசி, ஃபிரிட்ஜ் மீதான வரி 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தயாராகியுள்ளது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் உள்ளிட்ட பொருட்களின் மீதான இறக்குமதி வரி 10 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ஸ்பீக்கர், காலணிகள், கார் டயர், வைரம் உள்ளிட்ட 19 பொருட்களின் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.

19 பொருட்கள் மீதான சுங்க வரி உயர்வு  நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

Classic Right sidebar United States, India, USD, INR, central government, மத்திய அரசு, வரி உயர்வு, Import Duty வணிகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OUaAXJ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment