Thursday, September 27, 2018

சபரிமலை கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதி - உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தேவசம் போர்டு மனு  

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், உச்சநீதிமன்றத்தில் தேவசம் போர்டு தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டது என்றும் ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். 

சபரிமலைக்கு தினமும் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் வருவதாகவும் இதனால் கூட்டத்தில் பெண்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார். பம்பையில் ஏற்கனவை உள்ள கழிவறைகள் மோசமான நிலையில் உள்ளதாகவும் அதனால், பெண்கள் கோயிலுக்கு வரும் போது, கூடுதலாக கழிவறைகள் அமைக்க வேண்டும் எனவும் பத்மகுமார் கூறினார். 

புலிகள் வனப்பகுதியில் ஏற்கனவை நிலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது கோயிலுக்கு பெண்கள் வந்தால், கூடுதலாக 100 ஏக்கர் வனப்பகுதி எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், உச்சநீதிமன்றம் உத்தரவு குறித்து  தேவசம்போர்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பத்மகுமார் கூறினார்.

Classic Right sidebar சபரிமலை, சீராய்வு மனு, SabariMala, SupremeCourt இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DAktsn
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment