Thursday, September 27, 2018

லஞ்சம் கேட்ட வீடியோவை வெளியிட்டாதால் டிராக்டரை பறிமுதல் செய்த காவலர்..?

மணல் கடத்தலுக்கு காவல் ஆய்வாளர் லஞ்சம் கேட்ட ஆடியோவை வெளியிட்ட நபரின் வீட்டு வாசலில் நிற்கும் டிராக்டரை மற்றொரு காவல் ஆய்வளார் சண்டையிட்டு பறிமுதல் செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளன

ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் முகம்மது நசீர், அதே பகுதியைச் சேர்ந்த நபரிடம் திருட்டுத்தனமாக மணல் அள்ள லஞ்சம் கேட்கும்  ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த ஆடியோ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்திருந்த நபரின் வீட்டுக்கு சென்ற சாயல்குடி காவல் ஆய்வாளர் ஜேக்கப் ஜெர்ரி, அங்கு நின்றிருந்த டிராக்டரில் மண் இருப்பதால் அதன் உரிமையாளர் மனைவியுடன் சண்டையிட்டு பறிமுதல் செய்தார்.

இதனால் முகம்மது நசீரின் ஆடியோவை வெளியிட்டதால் சக காவலர் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

Classic Right sidebar ராமநாதபுரம், மணல் கடத்தல், லஞ்சம், Ramanathapuram, Sand Smuggling, Bribe தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OWyaCW
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment