தமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் கடைபிடிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் பாராட்டியுள்ளார்
நீட் தேர்வு குளறுபடிக்காக 196 மதிப்பெண்கள் வழங்ககோரிய உத்தரவிற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது எந்த ஒரு பொதுத்தேர்வையும் அனுமதிக்க கூடாது என்ற மனநிலையில் தமிழக அரசு உள்ளதாக சிபிஎஸ்இ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது
இதனை மறுத்த, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ், தமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் உள்ளதாக பாராட்டினார்
மேலும் நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் தமிழகம் உள்ளது என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறினார்
இதுதொடர்பான பிரமாண பத்திரத்தை அக்.9ம் தேதிக்கு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது
Classic Right sidebar Supreme Court, neet, உச்சநீதிமன்றம், நீட் தேர்வு, சிபிஎஸ்இ, CBSE இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QWC9kF
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment