Tuesday, October 31, 2023

காசாவின் தாய்மார்களிடமிருந்து ஒரு பாடல்: கொஞ்சம் நேரம் கொடுங்கள்!

அழகான சிவப்பு ரோஜாக்களுடன் புன்னகை பூக்கும் பாதைகளினூடே காசா பிள்ளைகளை பெறுகிறது அதன் குழந்தைகள் அதிகாலைப் பனியில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் காசா மீண்டும் கருவுற்றிருக்கிறது ஆனால் காசாவின் கருவுக்கல்லவா சதிகாரர்கள் குறி வைத்திருக்கிறார்கள் காசாவின் தாய்மார்கள் எல்லாம் கதி கலங்கிப் போயிருக்கிறார்கள் ரத்தம் வழிந்த கைகளின் ஊடாக குழந்தைகள் மீது போர்வைகளைப் போர்த்துகிறார்கள் ஆனால் சிலரோ ராக்கெட்டுகளை அல்லவா அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள் இவர்களின் பாசாங்குத்தனத்தால் தாய்மார்களின் செவிப்பறைகள் கிழிந்து போயிருக்கின்றன ஆனாலும் நீதி ஆடையின்றி அம்மணமாய் […]

from vinavu https://ift.tt/rFQwf4t
via Rinitha Tamil Breaking News

APAAR ‘One nation, One Student ID’: The country becoming an open-air fascist prison!

The objective of the fascist Modi government is to transform the people into mere numbers and intensify exploitation and oppression. This "APAAR" ID card is to implement it among the students.

from vinavu https://ift.tt/IA0iGpj
via Rinitha Tamil Breaking News

பிரிட்டன்: மிக மோசமான வறுமையின் பிடியில் நாற்பது இலட்சம் மக்கள்

ஆய்வில் பதிலளித்தவர்களில் 61% பேர் கடந்த மாதங்களில் தாங்கள் பட்டினி கிடந்ததாகவும், உணவு வங்கிகளையோ, உறவினர்களையோ உணவுக்காக சார்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

from vinavu https://ift.tt/Es8rBQS
via Rinitha Tamil Breaking News

பாலஸ்தீனம்: பாசிச மோடி கும்பலின் துரோகம்!

ஐ.நா. மன்ற தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணித்ததன் மூலம் மோடி அரசானது, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் மறைமுகமாகத் தனது ஆதரவை நிரூபித்துக் காட்டி, பாலஸ்தீன மக்களின் முதுகில் குத்தியுள்ளது.

from vinavu https://ift.tt/TcUWOMp
via Rinitha Tamil Breaking News

Monday, October 30, 2023

காசா: பாலஸ்தீன தாய்மார்களுக்கு பால் சுரப்பதே நின்றுவிட்டது!

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்கும் பெண்கள், தங்களுக்குப் பால் சுரப்பதற்குக் கூடுதலாக நீர் அருந்த வேண்டிய தேவையுள்ளது. ஆனால், போதுமான குடிநீர் கிடைக்காததால்‌ பல தாய்மார்களுக்குப் பால் சுரப்பதே நின்று போய்விட்டது.

from vinavu https://ift.tt/XMxU9ar
via Rinitha Tamil Breaking News

பாலஸ்தீன இனப்படுகொலை – பாசிஸ்டுகள் உலகளவில் ஒன்றிணைகிறார்கள்!

இன்று பாலஸ்தீனத்தில் நடந்தது உலகில் வேறு எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த எந்த ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமோ அல்லது எந்தவொரு உரிமைக்கான போராட்டங்களோ இனத்தின் பெயராலோ, மதத்தின் பெயராலோ இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படலாம்.

from vinavu https://ift.tt/itCm7qJ
via Rinitha Tamil Breaking News

கொட்டும் மழையிலும் “FREE PALESTINE” | பேரணி | சென்னை

உழைக்கும் வர்க்கம், நடுத்தரவர்க்கம், மேல் தட்டு நடுத்தர வர்க்கம் என அனைவரும் ஒரே குரலில் முழங்கினார்கள் "SAVE PALESTINE" என்று.

from vinavu https://ift.tt/B7LA2JR
via Rinitha Tamil Breaking News

கோவையில் தெருமுனைப் பிரச்சாரம்: வேண்டாம் GST! வேண்டும் ஜனநாயகம்!

GST கொண்டுவந்த பின் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, சிறு-குறு தொழில்கள் நசிவு, வேலையின்மை, உற்பத்தியாளர்கள் தற்கொலை, நிறுவனங்களை மூடியது என பல்வேறு பாதிப்புகள் குறித்துப் பேசும் போது மக்கள் நன்கு கவனித்து ஆதரவு கொடுத்தனர்.

from vinavu https://ift.tt/rHRPh6l
via Rinitha Tamil Breaking News

Sunday, October 29, 2023

இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து உலகளவில் தீவிரமடையும் மக்கள் போராட்டங்கள்!

காசா மீது கொடூரமான வான்வழித் தாக்குதலை நடத்திவரும் இஸ்ரேல் ராணுவம் அக்டோபர் 26 இரவு முதல் தரைவழித் தாக்குதலையும் தொடங்கி பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதைத் தீவிரப்படுத்தியுள்ளது. தீவிரமடைந்திருக்கும் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்தும், இஸ்ரேல் நிகழ்த்தும் இனப்படுகொலைக்கு முற்று முழு ஆதரவளிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் உலக அளவில் மக்களின் எழுச்சிமிகு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 27 அன்று அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் (Grand Central […]

from vinavu https://ift.tt/8J2sU95
via Rinitha Tamil Breaking News

இனப்படுகொலையை நியாயப்படுத்த சமூக ஊடக பிரபலங்களை விலைக்கு வாங்கும் இஸ்ரேல்!

இஸ்ரேலின் போலிப் பிரச்சாரக் குழு #HAMASisISIS மற்றும் #StandWithIsrael என்ற ஹேஷ்டேக்குகளுடன்  எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்பதும் கிம் கர்தாஷியன், மடோனா, கேல் கடோட், கேசி நீஸ்டாட் மற்றும்  பல பிரபலங்கள்  ஏற்கனவே இப்போலிப் பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர் என்பதும் அம்பலமாகியுள்ளது.

from vinavu https://ift.tt/BylFuA9
via Rinitha Tamil Breaking News

Saturday, October 28, 2023

இளைஞர்கள் தினமும் 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டுமாம்

இளைஞர்கள் தினமும் 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்! இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்கிறார்! இந்திய இளைஞர்களின் உற்பத்தி திறன் குறைவாக இருக்கிறதாம்! இந்தியாவை முன்னேற்றும் பொறுப்பு இளைஞர்கள் கையில் இருக்கிறதாம்! வாரத்துக்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டுமாம்! தினமும் 10 மணி நேரம், வாரத்துக்கு 7 நாட்களும் வேலை செய்ய வேண்டும்! தொழிலாளி இப்படி வேலை செய்தால் 35 வயதுக்குள் செத்துப் போவான்! கார்ப்பரேட்டுகள் கொழுக்க நாம் சாக வேண்டுமாம்! புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, […]

from vinavu https://ift.tt/6FhBjWY
via Rinitha Tamil Breaking News

ஒடிசா: வேதாந்தாவின் நலன் காக்க துப்பாக்கி முனையில் கருத்துக்கேட்பு கூட்டம்!

கூட்டத்தில் பேசிய ஒரு பெண்மணி, ”வேதாந்தாவின் ஊழியர்களும் அரசு அதிகாரிகளும் எங்கள் கிராமத்திற்கு வந்து சுரங்க திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மிரட்டினார்கள்” என்று குற்றம்சாட்டினார்.

from vinavu https://ift.tt/skw03Wo
via Rinitha Tamil Breaking News

சொற்களின் கூட்டுக்குள் ஓர் மௌனப் பறவை! | பாலஸ்தீனம் | கவிதை

சொற்களின் கூட்டுக்குள் ஓர் மௌனப் பறவை! தனிமைப் பெருவெளியில் நின்றபடி பெயர் தெரியாத அப்பறவை பெருந்துயரத்தில் ஆழ்ந்திருந்தது! துடைத்தெறிய முடியாத துயரம் அதன் கண்களில்! நூற்றாண்டு களைப்பைச் சுமந்திருந்தது அதன் உடல்! துயரத்தின் நிலத்திலிருந்து வந்திருக்க வேண்டும் அப்பறவை! நான் கேட்டபோது மெல்ல என் காதுகளில் பாலஸ்தீனத்திலிருந்து வருவதாகச் சொன்னது ஒரு சமயம்! ஈழத்திலிருந்து என்றது மற்றொரு சமயம்! பொய் சொல்கிறதா உற்றுப் பார்த்தேன்! அதன் சிறகுகளில் குண்டு துளைத்த துளைகள் இருந்தன! அலகின் நுனி பெயர்ந்து […]

from vinavu https://ift.tt/qaRXLO2
via Rinitha Tamil Breaking News

Friday, October 27, 2023

இஸ்ரேலால் இனப்படுகொலை செய்யப்படும் பாலஸ்தீன மக்கள்: இரட்டைவேடம் போடும் ஐநா சபை

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு உட்பட்டே ஐநாவின் ஒவ்வொரு செயல்பாடும் அமைந்திருக்கிறது என்பதை பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.

from vinavu https://ift.tt/pkIWJ6P
via Rinitha Tamil Breaking News

”இந்தியா அல்ல பாரத்” – NCERT-இன் கரசேவை!

ஏற்கனவே ஜி20 மாநாட்டில் ”இந்தியா” என்ற பெயருக்கு பதிலாக “பாரத்” என்ற பெயரை பயன்படுத்தியது கடும் கண்டனத்துக்கு உள்ளான நிலையில் NCERT-இன் இந்தப் பரிந்துரை சங்கப்பரிவார பாசிஸ்டுகளின் திட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதையே காட்டுகிறது.

from vinavu https://ift.tt/xLDhyM3
via Rinitha Tamil Breaking News

Thursday, October 26, 2023

மலையகம் 200

மனிதர்கள் வாழாத மத்திய இலங்கைப் பகுதிக்குள் கொண்டுசெல்லப்பட்ட இம்மக்களின் குருதியிலும் வேர்வையிலும் கண்ணீரிலும் சாலைகள், தொடர் வண்டிப் பாதைகள் உள்ளிட்ட இலங்கையின் உள்கட்டுமானங்கள் உருவாயின.

from vinavu https://ift.tt/zjIOe81
via Rinitha Tamil Breaking News

🔴LIVE: மதுரை கிரானைட் குவாரிக்கான டெண்டரை எதிர்த்து போராட்டம்!

வரும் அக்டோபர் 31 அன்று மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சேக்கிப்பட்டி கிராமத்தில் உள்ள மலையை கிரானைட் குவாரிக்காக டெண்டர் விடுகிறது திமுக அரசு. இதனைக் கண்டித்து, டெண்டர் விடுவதை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இன்று (26/10/2023) முதல் தொடர் போராட்டம் துவங்கியுள்ளது. நேரலை | பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை […]

from vinavu https://ift.tt/pKPzZ04
via Rinitha Tamil Breaking News

1500 மருத்துவப்படிப்புக்கான இடங்கள் வீணடிப்பு! 600 மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி!

காலக்கெடுவிற்குப் பின்னர், காலியாக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அக்டோபரில் கலந்தாய்வு நடத்திய மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 600 மாணவர்களின் சேர்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அம்மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

from vinavu https://ift.tt/m3zxPXh
via Rinitha Tamil Breaking News

ஆளுநர் மாளிகை மீது குண்டு வீச்சாம்! | கவிதை

அவர் ஆளுநராம்.. அவர் இருப்பது மாளிகையாம்.. அதன் மீதாம்.. குண்டாம்.. வீசப்பட்டதாம்.. (ஆளுநர் கூறுகிறார்) ரவுடி காணவில்லையாம்.. போலீஸ் தேடுகிறதாம்.. அவர் ஏற்கெனவே கமலாலயத்தில் குண்டு வீசியவராம்.. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரி இல்லையாம்.. தமிழ்நாட்டில் உள்ள சின்ன குழந்தைகூட இந்த கிள்ளைக் கதையை கேட்டு சிரிக்கிறது. சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/k4XKMOB
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 25, 2023

மருது பாண்டியர்கள் தேடப்படுகிறார்கள்! | கவிதை

மருது பாண்டியர்கள் தேடப்படுகிறார்கள்! ஜம்புத்தீவு பிரகடனம் மீண்டும் உயிர்த்தெழுகிறது வரலாறு மருது உயிர்த்தெழக் கோருகிறது மருது உயிர்த்தெழும்போது கூடவே தொண்டைமான்களும் உயிர்த்தெழுகிறார்கள் இப்போது சற்று அமைதியாக இருப்போம் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் அன்றும் சாத்தியமானவைகளை பற்றி பேசாமலா இருப்பர்? மருதிருவர் சாத்தியமானவையை அல்ல; சரியைப் பேச வேண்டும் என்றார்கள் ஈன ஐரோப்பியரை அழித்து ஒழிக்காமல் வாழ்வில்லை என்றான் சின்ன மருது அதிகாரப் பீடத்தை நத்திப் பிழைப்போர் தலையில் இடியாய் இறங்கியது மருதுவின் குரல் இரத்த சொந்தங்கள் […]

from vinavu https://ift.tt/hkCjqnR
via Rinitha Tamil Breaking News

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல் | காணொளி

இதுவரை இஸ்ரேலின் தாக்குதலால் 2,360 குழந்தைகள் உட்பட குறைந்தது 5,791 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் அக்டோபர் 24 அன்று அறிவித்துள்ளது.

from vinavu https://ift.tt/UsRFhIz
via Rinitha Tamil Breaking News

பி.எம். விஸ்வகர்மா பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கான சதித்திட்டம்!

இத்திட்டத்தின் மூலம் நேரடியாக குலத்தொழிலை திணிக்காமல், மக்களின் வறிய பொருளாதார நிலைமைகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மறைமுகமாக திணிக்கிறது மோடி அரசு.

from vinavu https://ift.tt/Ti0Re7U
via Rinitha Tamil Breaking News

மதுரை: விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்க வரும் மூன்று கிரானைட் குவாரிகள்!

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சேக்கிப்பட்டி என்னும் கிராமத்தில் உள்ள மலையை வரும் அக்டோபர் 31 அன்று கிரானைட் குவாரிக்காக டெண்டர் விடுகிறது தமிழ்நாடு அரசு. இம்மலை அவ்வூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக உள்ளது. இம்மலையின் அடிவாரத்தில் வருடம் 365 நாட்களிலும் தண்ணீர் தேங்கி குளம் போன்று இருக்கும். இதுதான் அவ்வூர் மக்களின் தண்ணீர் தேவையையும் விவசாய பாசனத்திற்கும் உயிராதமாக திகழ்கிறது. ஒருமுறை மழை பெய்தாலும் அப்பகுதி சற்றிலும் உள்ள விவசாயத்திற்கு போதுமானதாக தண்ணீரை சேமித்து […]

from vinavu https://ift.tt/OB9mbV6
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 24, 2023

நியூஸ் கிளிக் எஃப்.ஐ.ஆர் நகலை எரிக்கப் போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

ஊடகங்கள் செய்ய வேண்டிய கடமையை மட்டுமே நியூஸ் கிளிக் செய்தது. நியூஸ்கிளிக் மூலம் பெறப்பட்ட பயங்கரவாத நிதியுதவி கொண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டது என்ற வதந்தியைப் பரப்பி, அதன்மூலம் விவசாயிகள் போராட்டம் மக்கள் விரோதமானது, தேச விரோதமானது என்று சித்தரிக்க பாஜக அரசு இந்த கேலிக்கூத்தான எஃப்.ஐ.ஆர்-ஐ பயன்படுத்துகிறது.

from vinavu https://ift.tt/VwirbY3
via Rinitha Tamil Breaking News

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: பி.ஜே.பி – ஆர். எஸ். எஸ் சங்கி கும்பலுக்கான மற்றுமொரு களம்

மற்ற நாடுகளுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடும் போதும் இயல்பாக பார்த்துவிட்டு கடந்து செல்லும் ரசிகர்களை இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது மட்டும் இயல்பாகக் கடந்து செல்ல விடாமல் கார்ப்பரேட் ஊடங்களும் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பலும் திட்டமிட்டே செயல்படுகின்றன.

from vinavu https://ift.tt/FZXqUME
via Rinitha Tamil Breaking News

Monday, October 23, 2023

உத்திரப் பிரதேசம் : கல்லூரியில் ‘ஜெய் ஸ்ரீராம்’  முழக்கமிட்டதை கண்டித்த இரு ஆசிரியர்கள் பணியிடைநீக்கம்

பிஜேபி ஆளும் மாநிலங்களில் தனது இந்துராஷ்டிரக் கனவை நடைமுறைப்படுத்தி வருவதன் ஒரு நிகழ்வே மேற்கண்ட சம்பவம். பிஜேபி ஆளும் மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இந்துத்துவ வெறி எந்தவிதத் தடையுமின்றி பரப்பப்படுகிறது.

from vinavu https://ift.tt/IYMDCLu
via Rinitha Tamil Breaking News

இந்துராஷ்டிர தர்பார்!

நடப்பது நாடாளுமன்ற ஜனநாயகமல்ல, இந்துராஷ்டிர தர்பார். பேரரசரைப் புகழ்ந்து பாடுபவர்களுக்கும் இரந்துண்டு வாழ்பவர்களுக்கும் மட்டுமே இங்கு அனுமதி.

from vinavu https://ift.tt/k8xUMft
via Rinitha Tamil Breaking News

என் நண்பர்களின் பட்டியல் சுருங்கி வருகிறது | கவிதை

அக்டோபர் 20-ஆம் தேதியன்று தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் (Khan Yunis) இஸ்ரேலின் குண்டுவீச்சில் “ஆக்சிஜன் இஸ் நாட் ஃபார் தி டெட்” (Oxygen is Not for the Dead) என்ற நாவலின் ஆசிரியரும் கவிஞருமான ஹெபா அபு நாடா (Heba Abu Nada) கொல்லப்பட்டார். பாலஸ்தீன கலாச்சார அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டது. கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் (அக்டோபர் 19) ஹெபா அபு நாடா எழுதிய கவிதை என் நண்பர்களின் பட்டியல் சுருங்கி வருகிறது […]

from vinavu https://ift.tt/PRvqsgf
via Rinitha Tamil Breaking News

அதிகரித்துவரும் பாலியல் வன்முறைகள்: சீழ்ப்பிடித்து நாறும் முதலாளித்துவக் கட்டமைப்பு!

நம்மை காப்பாற்றுவதாக கூறப்படும் ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் ஊழலில் மிதந்து கொண்டிருக்கிறது. பாலியல் குற்றங்களுக்கு இதுவரை கொண்டுவந்தக் கடுமையான சட்டங்கள் சட்டப் புத்தகத்தில் தூங்குகின்றன.

from vinavu https://ift.tt/eo19Say
via Rinitha Tamil Breaking News

Sunday, October 22, 2023

ஹோமோஃபோன்ஸ்-உம் கூலிப் கதைகளும் | ஆசிரியர் உமா மகேஷ்வரி

"ஹான்ஸ் ன்னா என்னடா?"... | "மிஸ் .. உங்களுக்குத் தெரியாதா...அது பாக்கு...சாப்பிட்டா போதை வரும். "...

from vinavu https://ift.tt/SJ7qE6R
via Rinitha Tamil Breaking News

மதுரையில் நெதன்யாகு, ஜோ பைடன் உருவ பொம்மைகள் தூக்கிலிடப்பட்டன!

நேற்று (21.10.2023) மக்கள் கலை இலக்கிய கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் அவர்களின் தலைமையில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக காசா பகுதியில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்த குற்றவாளிகளான இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரின் உருவபொம்மைகள் தூக்கிலிடப்பட்டு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/Z59IAaX
via Rinitha Tamil Breaking News

Saturday, October 21, 2023

திருவாரூர் சுவர் விளம்பரத்தை அழித்து போலீஸ் அராஜகம்! | ஜனநாயக சக்திகள் கண்டனம்

திருவாரூர் சுவர் விளம்பரத்தை அழித்து போலீஸ் அராஜகம்! ஜனநாயக சக்திகள் கண்டனம் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/InAmgHy
via Rinitha Tamil Breaking News

Friday, October 20, 2023

காசா மீதான போரைக் கண்டித்து அமெரிக்க வெளியுறவுத்துறை இயக்குனர் ராஜினாமா!

”வாஷிங்டன் (அமெரிக்கா) பல பத்தாண்டுகளாக செய்து வரும் அதே தவறை, ஜோ பைடன்‌ நிர்வாகமும் தொடர்ந்து செய்து வருகிறது. இனிமேலும் நான்‌‌ அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை.”

from vinavu https://ift.tt/W0hTAvr
via Rinitha Tamil Breaking News

இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்பு போரை நிறுத்து! | போஸ்டர்

இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்பு போரை நிறுத்து! நெதன்யாகு, மோடி, பைடன் போர் வெறி பிடித்த ஓநாய்கள்! ஹமாஸின் போர், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் எதிர்வினையே! இஸ்ரேலின் போரை ஆதரிக்கும் அமெரிக்கா, உலக மக்களின் எதிரி! யூத இனவெறி இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்துவது இன அழிப்பு போர்! குஜராத் இனப்படுகொலை குற்றவாளி மோடி இஸ்ரேலை ஆதரிப்பது ஆச்சரியமல்ல! சர்வதேச பாட்டாளி வர்க்க உணர்வோடு பாலஸ்தீன விடுதலைக்கு துணைநிற்போம்! ம.க.இ.க | பு.மா.இ.மு | […]

from vinavu https://ift.tt/8vpLu9O
via Rinitha Tamil Breaking News

நேரலை | காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! | சென்னையில் தெருமுனை பிரச்சாரம்

இரத்த வெறிபிடித்த இஸ்ரேலே காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! சென்னையில் தெருமுனை பிரச்சாரம் இரத்த வெறிபிடித்த இஸ்ரேலே காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! என்ற முழக்கத்தை முன்வைத்து சென்னை சைதாப்பேட்டையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் உழைக்கும் மக்களிடையே தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பாகம் – 1 பாகம் – 2 பாகம் – 3 […]

from vinavu https://ift.tt/ZFbakfq
via Rinitha Tamil Breaking News

உங்களின் ஏவுகனைகள் தோற்றுவிட்டன! | கவிதை

உங்கள் பீரங்கி குண்டுகள் எங்கள் உயிரை பலியிடலாம் ஆனால், இவற்றில் எதுவுமே எங்கள் குரலை ஒடுக்கிவிடாது!

from vinavu https://ift.tt/45ZDjN0
via Rinitha Tamil Breaking News

தனியார்மய ஆதிபராசக்தி பெற்றெடுத்த பங்காரு!

ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்க பெருமூச்சு மதம் என்பர். அந்த ஏக்கப் பெரு மூச்சினை மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆக்கி பல்லாயிரக்கணக்கான கோடிகள் சொத்து சேர்த்தவர்தான் இந்த பங்காரு.

from vinavu https://ift.tt/DO9kHjF
via Rinitha Tamil Breaking News

Thursday, October 19, 2023

இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்

அக்டோபர் 17 அன்று காசா பகுதியில் உள்ள அல்-அஹ்லி அல்-அரபி (al-Ahli al-Arabi) மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் 500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்தது. இதனைத்தொடர்ந்து இஸ்ரேலைக் கண்டிக்கும் விதமாக பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. அம்மன் (ஜோர்டன்), சனா (யேமன்), துனிஸ் (துனிசியா), ஏதன்ஸ் (கிரீஸ்), லண்டன் (இங்கிலாந்து), நியூ யார்க் (அமெரிக்கா) View this post on Instagram A post shared by Al Jazeera English (@aljazeeraenglish) பாசிச […]

from vinavu https://ift.tt/nx1NqgA
via Rinitha Tamil Breaking News

காசா மருத்துவமனை மீதான தாக்குதல்: இஸ்ரேலிய அரசின் இனப்படுகொலை! | தோழர் அமிர்தா

காசா மருத்துவமனை மீதான தாக்குதல்: யூத இனவெறி பயங்கரவாத இஸ்ரேலிய அரசின் இனப்படுகொலை! காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/2AdJFin
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 18, 2023

திருவாரூர் சுவர் விளம்பரத்தை அழித்து போலீஸ் அராஜகம்!

போலீஸின் இந்த வன்மத்திற்கு காரணம் காவி வெறி தலைக்கேறி உள்ளது என்பதே. இதுபோல் தமிழ்நாடு முழுவதும் நமது முழக்கங்களை போலீஸின் உதவியோடு அழித்து அதை செல்பி எடுத்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் முகநூலில் பதிவிட்டு குதூகலம் அடைந்து வருகிறது.

from vinavu https://ift.tt/xlUEiXk
via Rinitha Tamil Breaking News

சரிந்துவரும் மோடியின் பிம்பத்தைத் தூக்கி நிறுத்தவே மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு!

மகளிர் இட ஒதுக்கீடு மூலம் தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காக பெண்களின் வாக்குவங்கியைப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர, பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்ற சிந்தனையெல்லாம் பா.ஜ.க. கும்பலுக்கு துளியும் கிடையாது.

from vinavu https://ift.tt/xZSQh6G
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியதன் பின்னணி | தோழர் மருது

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக குறிவைக்கின்ற தொகுதிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ் பேரணியின் பின்னணி குறித்தும் மக்கள் அதிகாரம் செய்தி தொடர்பாளர் மருது அவர்களின் விரிவான நேர்காணல்.. காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/xnhysob
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 17, 2023

காசா மருத்துவமனை மீதான தாக்குதல்: இஸ்ரேலின் இனப்படுகொலை!

நேற்று (17.10.2023) காசா பகுதியில் உள்ள அல்-அஹ்லி அல்-அரபி (al-Ahli al-Arabi) மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளிதாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது யூத இனவெறி பயங்கரவாத இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனியர்கள் மீது நடத்தியுள்ள படுகொலையாகும். Video caught the second a strike hit Gaza's al-Ahli Baptist hospital and killed hundreds. Authorities in the assaulted domain are blaming Israel for the strike ⤵️ pic.twitter.com/FsujVYoKfk […]

from vinavu https://ift.tt/eXTdNBR
via Rinitha Tamil Breaking News

வேண்டாம் BJP, வேண்டும் ஜனநாயகம்! | இரண்டாம் கட்ட பிரச்சார இயக்கம்

"1000 தெருமுனைப் பிரச்சாரங்கள்" "100 தெருமுனைக் கூட்டங்கள்"

from vinavu https://ift.tt/gyQGJc3
via Rinitha Tamil Breaking News

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: “ஜெய் ஶ்ரீ ராம்” கோஷம் உணர்த்துவது என்ன?

இப்போது அகமதாபாத் அரங்கத்தில் நடைபெற்ற போட்டியின்‌ பொழுது மதவாத கோஷம் எழுப்பப்பட்டது கூட தன்னிச்சையான மந்தை மனநிலையில் இருந்து அல்ல. இந்த நிகழ்வு வெகுவாக நிறுவன ரீதியாக கட்டமைக்கப்பட்ட ஒன்று.

from vinavu https://ift.tt/e25jslA
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/wUMg9eq
via Rinitha Tamil Breaking News

Monday, October 16, 2023

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – கோவை ஸ்ரீசைதன்யா பள்ளியை இழுத்து மூடு!

சின்மயா (மிதுன் சக்ரவர்த்தி), கலாச்சேத்ரா (ஹரி பத்மநாதன்), பத்ம சேசாத்ரி(சிவசங்கர் பாபா) என தனியார் பள்ளிகளின் பாலியல் சுரண்டல் தொடர்ந்து கொண்டே தான் போகிறது. கார்ப்பரேட் கும்பல்களும், சாமியார் கும்பல்களும் தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தி மாணவிகள் மீது பாலியல் சுரண்டலை அரங்கேற்றி வருகின்றனர்.

from vinavu https://ift.tt/GrTxE3p
via Rinitha Tamil Breaking News

முனகுவது கூட இனி தேசத்துரோகம்!

பீமா கோரேகான் முதல் சுற்று என்றால் இப்போது இரண்டாவது சுற்று தொடங்கியிருக்கிறது. சுற்றுகளின் எண்ணிக்கை அதிகம் ஆகலாம். கைதுகளின் எண்ணிக்கை ஒருபோதும் குறையப் போவதில்லை..

from vinavu https://ift.tt/o0NgbPT
via Rinitha Tamil Breaking News

Sunday, October 15, 2023

🔴LIVE: இரத்தவெறி பிடித்த இஸ்ரேலே.. பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு! | மதுரை ஆர்ப்பாட்டம்

இரத்தவெறி பிடித்த இஸ்ரேலே.. பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு! | மதுரை ஆர்ப்பாட்டம் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/3cRxMyN
via Rinitha Tamil Breaking News

இஸ்ரேலை ஆதரிக்கும் இந்துத்துவ பாசிஸ்டுகள் | தோழர் மருது

இஸ்ரேலை ஆதரிக்கும் இந்துத்துவ பாசிஸ்டுகள் | தோழர் மருது காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/B0yz6Mk
via Rinitha Tamil Breaking News

Saturday, October 14, 2023

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கு! | தோழர் மருது

தமிழ்நாடு உயர்நீதி மன்றம்னு பெயர் மாத்தணும் | தோழர் மருது காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/LhGjbfC
via Rinitha Tamil Breaking News

Friday, October 13, 2023

அதானியின் அயோக்கியத்தனத்தை தோலுரித்த பிரிட்டன் பத்திரிக்கை!

அதானியின் இன்னுமொரு அயோக்கியத்தனம்! பிரிட்டன் பத்திரிக்கை தோலுரிக்கிறது! இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்த நிலக்கரியை 52% அதிக விலை வைத்து இந்திய மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு சப்ளை செய்துள்ளது, அதானி நிறுவனம்! நிலக்கரி விலையால் ஏற்பட்ட மின்னுற்பத்தி செலவு மக்கள் தலை மீதே சுமத்தப்பட்டுள்ளது! ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் பொட்ரோல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அம்பானி கொள்ளையடித்ததைப் போல இதுவும் நடந்துள்ளது! அரசு எந்திரத்தின் துணையோடு இந்த கொள்ளைகள் நடக்கின்றன! இது அம்பானி – அதானியின் வேட்டைக்காடு […]

from vinavu https://ift.tt/pJuyqD8
via Rinitha Tamil Breaking News

இடைநிலை – பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தை ஆதரிப்போம்!

ஆசிரியர்கள் போராட்டம் என்பது திமுக அரசு தங்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அடிப்படையில் தான் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

from vinavu https://ift.tt/Mj3U2af
via Rinitha Tamil Breaking News

Thursday, October 12, 2023

ஆப்கானை உருக்குலைத்த நிலநடுக்கம் | படக்கட்டுரை

கடந்த அக்டோபர் 7 சனிக்கிழமையன்று, மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், சிகிச்சை அளிப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தொடர் நிலநடுக்கங்களால் 10,000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. 2000-க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. இதனால் மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்து […]

from vinavu https://ift.tt/FIOx2is
via Rinitha Tamil Breaking News

தலைவிரித்தாடும் கார்ப்பரேட் உலகம்! அழிந்து கொண்டிருக்கும் மானுடம்!

தலைவிரித்தாடும் கார்ப்பரேட் உலகம்! அழிந்து கொண்டிருக்கும் மானுடம்! ★ ஜாதி, மதம், இனம் எனும் அடையாள அரசியல், போதை, இணையதளம், சினிமா எனும் வலைப்பின்னலில் உலக மக்களை அடைத்துக்கொண்டிருக்கிறது கார்ப்பரேட் உலகம்! ★ லாபவெறி பிடித்த மிகை உற்பத்தி, ஆடம்பர நுகர்வு வெறி கலாச்சாரம் மற்றொரு பக்கம் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியின் பிடியில் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ★ தீவிரமாகும் கார்ப்பரேட் சுரண்டலால் வயிற்றுப்பிழைப்புக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்! ★ மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, இருப்பிடம் இதற்கு உத்தரவாதம் […]

from vinavu https://ift.tt/aFpd7q1
via Rinitha Tamil Breaking News

காசா மீதான இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்: படக்கட்டுரை

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழுவினர் 5000 ராக்கெட்டுகளை ஏவினர். அதனையடுத்து, இஸ்ரேல் காசா மீது மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் அரசின் இந்த கொடூர தாக்குதல்களுக்கு மோடி அரசும் மேற்குலக நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல்களில், காசாவில் பல குழந்தைகள் உட்பட 1,354 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 6,049 பேர் காயமடைந்துள்ளனர். பல பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். பாலஸ்தீனியர்களின் வழிபாட்டுத் தளங்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஹமாஸ் குழுவால் சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்கும் […]

from vinavu https://ift.tt/jVFKOq2
via Rinitha Tamil Breaking News

ஐ ஜாலி ஸ்கூலுக்கு போ.. போறோம் | கள அனுபவம்

எனது இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய இரு சிறுவர்களில் ஒருவன் "ஐ  ஜாலி ஸ்கூலுக்கு போ.. போறோம்" என்று சொல்லி வண்டியில் இருந்து குதித்தான். இதோ அடுத்தநாள் பள்ளியில் மகிழ்ச்சியாக காலை உணவு அருந்தி கொண்டிருக்கிறார்கள்.. அந்தத் தாயும் அளவில்லா மகிழ்ச்சியில் எனக்கு நன்றி சொன்னார்.

from vinavu https://ift.tt/D8pMC9U
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 11, 2023

காவிரி உரிமைக்காக திருவாரூரில் கடை அடைப்பு போராட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு

காவிரி உரிமைக்காக திருவாரூரில் கடை அடைப்பு போராட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/NlE4eL8
via Rinitha Tamil Breaking News

நெல்லை: தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் காஜா பீடி நிறுவனம்!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட காஜா பீடி நிறுவனம் 1960-களில் நெல்லை மேலப்பாளையத்தில் தனது கிளையை தொடங்கியது. பீடி நிறுவனமாக தொடங்கிய இந்நிறுவனம் தற்போது பல்வேறு பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாக தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது. அதன் வளர்ச்சிக்கு தொழிலாளிகள் உழைப்பை உறிஞ்சியதே காரணம். இதற்கான உதாரணமே மேலப்பாளையத்தில் நடந்த பீடித் தொழிலாளர்கள் போராட்டம்! மேலப்பாளையத்தில் பல குடும்பங்கள் பீடித் தொழிலை நம்பியயே உள்ளனர். குறிப்பாக பெண்கள். ஆனால் பீடி சுற்றும் பெண்களுக்கு சம்பளத்தை ஒழுங்காக வழங்காதது, நிறுவனத்தில் வேலை  […]

from vinavu https://ift.tt/BZrHfcO
via Rinitha Tamil Breaking News

போரை உடனே நிறுத்து! பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு! | தோழர் ஆ.கா.சிவா

போரை உடனே நிறுத்து! பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு! தோழர் ஆ.கா.சிவா, மாநில ஒருங்கிணைப்பாளர், பு.ஜ.தொ.மு,(மாநில ஒருங்கிணைப்புக் குழு) காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/ygp5E2O
via Rinitha Tamil Breaking News

2400-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட நிலநடுக்கப் பேரிடர்: நிரந்தரத் துயரில் ஆப்கன் மக்கள்

பட்டினிச் சாவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள சிறுநீரகத்தை விற்கும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டனர்.இந்தச் சூழ்நிலையில் நிலநடுக்கப் பேரிடரானது தற்போதைய ஆப்கன் மக்களின் உணவுத் தேவையில் மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

from vinavu https://ift.tt/ME7yw1W
via Rinitha Tamil Breaking News

பிக் பாஸும் பவா செல்லத்துரையும்

தங்களின் சுய விளம்பரத்திற்காக, சமூக சீரழிவை ஏற்படுத்துவதும் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக நடத்தப்படுவதுமான பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இந்த சமூகப் பொறுப்பற்ற பிழைப்புவாத நடவடிக்கையைத் தான் நாம் கண்டிக்கின்றோம்.

from vinavu https://ift.tt/126YBmU
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 10, 2023

பாலஸ்தீன மக்களுக்கு துணை நிற்போம்! | STAND WITH PALASTINE PEOPLE!

இது நாள் வரை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இல்லாமல் இருந்த இந்திய அரசு, தற்பொழுது இஸ்ரேலுக்கு பகிரங்கமாக தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறது. பாசிச மோடி தலைமையிலான ஆட்சி பாசிஸ்ட் நெதன்யாகுவுக்கு ஆதரவு தெரிவிப்பது எவ்வித ஆச்சரியமும் இல்லை.

from vinavu https://ift.tt/oqM0UPz
via Rinitha Tamil Breaking News

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்; போரை உடனே நிறுத்து!

உழைக்கும் மக்கள் யாரும் போரை விரும்புவதில்லை. இதில் பலியாவது மக்களே. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறது. தற்போதும் அதன் தொடர்ச்சியாகவே தாக்குதலை தொடுத்துள்ளது. ஹமாஸ் குழுவினரின் தாக்குதலையும் ஆதரிக்க முடியாது. குற்றவாளி இஸ்ரேல்தான்.

from vinavu https://ift.tt/DNgHl3P
via Rinitha Tamil Breaking News

ஒசூர் அருகே அத்திப்பள்ளி மற்றும் அரியலூர் பட்டாசு கடை வெடிவிபத்தில் 24 இளம் தொழிலாளர்கள் பலி!

முதலாளிகளின் இலாபவெறியும், அதிகாரிகள் இலஞ்சப் பேய்களாக இருப்பதும் மற்றும் அவர்களின் திமிர்த்தனமான அலட்சியமும் தொழிலாளர்களின் கொத்துக் கொத்தான மரணங்களுக்கு காரணமாக உள்ளன. இங்கே தொழிலாளர்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை.

from vinavu https://ift.tt/ypfQNZ8
via Rinitha Tamil Breaking News

ஆருத்ரா மோடி அண்ணாமலைக்கு செக் ! | தோழர் மருது

ஆருத்ரா மோடி வழக்கு தொடர்ந்து தமிழகத்தில் பேசுபொருளாக இருக்கிறது. ஏற்கனவே தமிழக அரசு அதன் சொத்துக்களை முடக்கிவிட்டது. தற்போது துபாயில் 500 ரூபாய் சொத்துக்கள் இருப்பதை கண்டுபித்துள்ளார்கள். அடுத்து இந்த வழக்கு எப்படிப்போக்கும்? இதில் என்ன நடக்கும் என்பதை பற்றி முதலில் பேசுவோம்.. வழக்கம் போல ஒன்றிய அரசின் பாஜக கட்சி கொள்ளைகாரர்களின் கூடாரம் தான். பொய் பேசுபவர்கள் பாசிஸ்ட்டுகளின் கூடாரம் தான். எனவே கண்டிப்பாக அவர்கள் யாரையும் கைதுசெய்ய விடமாட்டார்கள். சென்னை பலகலைக்கழகத்தில் இருந்த கௌரி […]

from vinavu https://ift.tt/P7fj5Iv
via Rinitha Tamil Breaking News

Monday, October 9, 2023

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான சோதனைகளைக் கண்டிப்போம்! – CDRO அறிக்கை

ஜனநாயகத்தை விரும்பும் குடிமக்கள் அனைவரும் முன்வருவதும், இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்புவதும் அவர்களது பொறுப்புமிக்கக் கடமை என்று ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு CDRO கருதுகிறது, இல்லையெனில், சர்வாதிகார மற்றும் பாசிச ஆட்சியானது மக்களின் அனைத்து உரிமைகளையும் பறித்துவிடும்.

from vinavu https://ift.tt/ERBDm8k
via Rinitha Tamil Breaking News

பூணூல் போட்டா பார்ப்பானா? | ஆளுநரை கிழித்த தோழர் மருது

ஆர்.என்.ரவி பூணூல் போடுகிறார் அதன் மூலம் என்ன சொல்ல வருகிறார். எல்லோரும் பூணூல் போட்டுகொள்ளலாம் என்று சொல்லவறாரா? இல்லை எல்லோரும் எப்போதுவேண்டுமானாலும் பார்ப்பனர்களாக ஆகலாம் என்று சொல்லவருகிறாரா? பூணூல் போட்ட உடனேயே பட்டியலின மக்களை SCயில் இருந்து OC-க்கு மாற்றி விடுவீர்களா? மோடி அரசின் தோல்விகளை நாம் பேசக்கூடாது என்பதற்காக, விஜயலட்சுமி சீமான் என்று பேசவைத்தார்கள், அது கீழ் இறங்கியது, இன்னொரு பிரச்சினையை கிளப்பிவிடுகிறார்கள். அண்ணாமலையை பற்றி பேசுகிறார்கள், அண்ணாமலை பாதை யாத்திரை போனால் என்ன? பாடை […]

from vinavu https://ift.tt/8okuLnY
via Rinitha Tamil Breaking News

ஜனநாயகக் குரல்களை நசுக்குவதற்காக ஆந்திரா – தெலுங்கானாவில் நடந்துள்ள NIA-யின் சோதனைகளைக் கண்டிப்போம்!

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தனது போரின் மூலம் அரசின் அத்துமீறல்களுக்கு எதிராகவும், பழங்குடியின மக்கள் அவர்களது மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படுவதற்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும், கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகவும் குரலெழுப்புவோர் மீது "ஊபா" சட்டத்தை ஏவுகிறது.  

from vinavu https://ift.tt/NPnLFBj
via Rinitha Tamil Breaking News

செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஹாலிவுட் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் போராட்டம் வெற்றி!

இதற்கு மேலும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்தால், இன்னும் பல பில்லியன் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் “மோஷன் பிக்சர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பு” தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கியுள்ளது.

from vinavu https://ift.tt/rtgUDEW
via Rinitha Tamil Breaking News

Saturday, October 7, 2023

அமெரிக்க வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

40 சதவீத ஊதிய உயர்வு, 32 மணி நேர வேலைக்கு 40 மணி நேர வேலை சம்பளம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைக்களுக்காக போராட்டத்தை அறிவித்திருக்கிறது, அமெரிக்கத் வாகனத் தொழிலாளர்கள் சங்கம்.

from vinavu https://ift.tt/Awta9qS
via Rinitha Tamil Breaking News

நியூஸ்கிளிக் மீதான அடக்குமுறை: பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

நெட்வொர்க் ஆப் வுமன் மீடியா இந்தியா சார்பில் நியூஸ்கிளிக் மீதான அடக்குமுறைக்கு எதிராக பத்திரிகையாளர்கள் இன்று(07-10-2023) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

from vinavu https://ift.tt/Qdp0rEx
via Rinitha Tamil Breaking News

நீயூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு! | தோழர் அமிர்தா

நீயூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு! | தோழர் அமிர்தா பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/FZBgzPe
via Rinitha Tamil Breaking News

லியோ: மறுகாலனியாக்க சீரழிவுகளைப் பாதுகாக்கும் அரசுக் கட்டமைப்பு!

சமூகத்தைப் பேரழிவுக்குள் இழுத்துச் செல்லும் மறுகாலனியாக்க கொள்கைகளை ஒழித்துக் கட்டுவதே நம் முன் உள்ள தீர்வு. அதை மறுகாலனியாக்கத்தைப் பாதுகாக்கும்  இந்த அரசுக்கட்டமைப்புக்குள் செய்ய முடியாது. இந்த சமூகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நமக்கு குறுக்கு வழிகள் ஏதுமில்லை.

from vinavu https://ift.tt/TbKXLEd
via Rinitha Tamil Breaking News

உடைக்கப்படாத சுவர்கள்; பூட்டிய கதவுகள் | கருணாகரன்

எங்களது கால்பட்ட இடம் தீட்டுப்பட்டுவிட்டது என்று அவர்கள் சொல்லிய போது நான் என் கால்களை பார்த்தேன். என் கால்கள் அப்படி கேவலமாக எதையும் மிதித்து கொண்டோ எதையும் செய்து கொண்டோ அங்கே வரவில்லை. அந்த கால்கள் மிகவும் சுத்தமாக இருந்தது, அதுவும் செருப்பு போட்டுக் கொண்டு.

from vinavu https://ift.tt/TMzow9r
via Rinitha Tamil Breaking News

Friday, October 6, 2023

சினிமா அரசியல் போதை மிருகம் – விஜய்

ஒழுக்கம், விழுமியங்கள், பிறரைப் பற்றி சிந்திப்பது குறித்து அக்கறையற்ற இத்தகைய மனநிலைதான் இந்துமதவெறி பாசிஸ்டுகள் தங்களுக்கான அடியாட்படையைத் திரட்டிக் கொள்வதற்கும் அடிப்படையாக உள்ளது.  எவ்வளவு பெரிய அபாயம் இது. சொல்லப்போனால் பண்பாட்டுத் தளத்தில் இந்துமதவெறி பாசிச கும்பலின் பங்காளிதான் நடிகர் விஜய்.

from vinavu https://ift.tt/maCQvzA
via Rinitha Tamil Breaking News

மறுக்கப்படும் காவிரி உரிமை | கண்டன ஆர்ப்பாட்டம் | மதுரை

நாள்: 07.10.2023 சனிக்கிழமை | நேரம்: காலை 10.00 மணி | இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மதுரை.

from vinavu https://ift.tt/gFaNfKz
via Rinitha Tamil Breaking News

பூணூல் அணிந்தால் பறையர் பார்ப்பனராக மாறிவிடுவார்களா? | தோழர் மருது

நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமம் சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ளது. அங்கு நடைபெறும் நந்தனார் குருபூஜை விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அதில் 100 தலித்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூணூல் அணிந்தால் பறையர் பார்ப்பனராக மாறிவிடுவார்களா? | தோழர் மருது காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/MZip9OG
via Rinitha Tamil Breaking News

Thursday, October 5, 2023

மகத்தான மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா

பின்தங்கிய சூழ்நிலையில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களிடம் மேக்நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்த்தால், அவர்கள் எதிர்மறைச் சூழல்களை வென்று எப்படிச் சாதிப்பது என்பதற்கான பாடத்தை அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வர்.

from vinavu https://ift.tt/IruRHOs
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - அக்டோபர் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

from vinavu https://ift.tt/J9AcVUS
via Rinitha Tamil Breaking News

ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் கைதுசெய்த தமிழ்நாடு அரசு!

சம வேலைக்கு சம ஊதியம், ஆசிரியர் என்ற தகுதி ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நிகழ் காலத்தில் ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். தமிழ்நாடு அரசோ நீங்கள் எல்லாம் செத்த பிறகு ரூ 10 லட்சம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகிறது.

from vinavu https://ift.tt/dm0zyA5
via Rinitha Tamil Breaking News

ரஷ்யா: போர் வேண்டாம் என்றால் 8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஏகாதிபத்திய ரசியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், இதன் உடன்நிகழ்வாக நடக்கும் உள்நாட்டு மக்கள் மீதான புதின் தலைமையிலான ரசிய அரசின் கொடூரமான அடக்குமுறைகளையும் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணத்தைக் கொண்டு ஆதரிக்கும் அல்லது கண்டும் காணாமல் அமைதியாக இருக்கும் யாரும் ஜனநாயகவாதிகளாக இருக்க முடியாது.

from vinavu https://ift.tt/3PEjFgG
via Rinitha Tamil Breaking News

தெலங்கானா பேச்சு: மிகப்பெரிய பிரிவினைவாதி நரேந்திர மோடி தான்!

தொடர்ந்து தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் வெறுப்பு பேச்சை உமிழக்கூடிய இந்த நாட்டின் பிரதமராக சொல்லிக் கொள்கின்ற நரேந்திர மோடி இந்த நாட்டின் மிகப்பெரிய பிரிவினைவாதியாக தன்னை நிரூபித்து இருக்கிறார். அவர் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த நாட்டின் பிரதமராக நீடிப்பதற்கு நரேந்திர மோடிக்கு இனியும் தகுதி இல்லை என்பதே உண்மை.

from vinavu https://ift.tt/T1FxaU5
via Rinitha Tamil Breaking News

DPI வளாகத்தில் நடைபெற்ற ஆசிரியர்களின் தொடர் போராட்டம்! | வீடியோ

திமுக அரசு சட்டமன்றத் தேர்தலின்போது தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக (DPI) வளாகத்தில் TNTET, இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். DPI வளாகத்தில் ஆசிரியர்கள் பத்து நாள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை இன்று காலை காக்கி ரவுடிகள் மூலம் கைது செய்து உள்ளது தமிழ்நாடு அரசு. காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/q0rh8xZ
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 4, 2023

மோடியின் ‘புதிய’ இந்தியாவில் இரண்டாம்தர குடிமக்களாக்கப்படும் இஸ்லாமிய மக்கள்

ஹரியானாவின் நூஹ் மாவட்டக் கலவரம், 2019 டெல்லி கலவரம் மற்றும் ஜார்க்கண்ட்டின் மூன்று மாவட்ட இராமநவமி கலவரங்கள் என இசுலாமிய மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடத்தப்பட்ட பகுதிகளில், இக்கலவரங்களுக்குப் பிறகு இசுலாமியர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும். நாடாளுமன்றத்தில் அண்மை கால சம்பவங்கள் நாட்டின் மாண்புமிக்க இடத்திலேயே இசுலாமியர்கள் இரண்டாந்தர குடிமக்களாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றன.

from vinavu https://ift.tt/yPaKuzk
via Rinitha Tamil Breaking News

ஆசிரியர்களைப் பிச்சைக்காரர்களாக எண்ணும் அரசு… | ஆசிரியர் உமா மகேஷ்வரி

சமூக நீதி காக்கும் பிற அமைப்புகள் எங்கே போயின? தேர்தல் கூட்டணி வைத்த மற்ற தோழமை அரசியல் கட்சிகள் நீதி, நேர்மை, ஜனநாயகம் என அனைத்தையும் சேர்த்து  அடகு வைத்து விட்டனவா?

from vinavu https://ift.tt/PSifNtD
via Rinitha Tamil Breaking News

நீயூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு!

ஒரு பக்கம், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புச் பிரச்சாரத்தை பரப்பும் ஊடகங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. மறுபக்கம், மோடி அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகைகள் அரசு நிறுவனங்களால் இரக்கமற்ற முறையில் வேட்டையாடப்படுகின்றன.

from vinavu https://ift.tt/Z768RWV
via Rinitha Tamil Breaking News

பி.எம் விஸ்வகர்மா யோஜனா எனும் குலத்தொழில் திட்டம்!

மக்கள் தங்கள் சாதி அடிப்படையிலான தொழில்களில் பிணைக்கப்பட்டதிலிருந்து தப்பிக்கவும், தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த கல்வி கிடைப்பதற்காகவும் பெரும்பாலும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர். இந்த விஸ்வகர்மா திட்டம் அவர்களை மீண்டும் கிராமங்களில் அவர்கள் மேற்கொண்ட (பாரம்பரிய) தொழிலுக்குள் தள்ளும்.

from vinavu https://ift.tt/s4gaV3e
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 3, 2023

புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் நிலத்தை அபகரித்துள்ள பி.ஜே.பி எம்எல்ஏக்கள்

மோசடியின் முதன்மைக் குற்றவாளிகளான பிஜேபி எம்எல்ஏக்கள் ஜான்குமாரும், ரிச்சர்ட் ஜான்குமாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

from vinavu https://ift.tt/UGtPYVR
via Rinitha Tamil Breaking News

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | சென்னை அரங்கக் கூட்டம் | செய்தி – படங்கள்

சென்னை அரங்கக் கூட்டம்

from vinavu https://ift.tt/TbgEaX9
via Rinitha Tamil Breaking News

கூட்டணியை முறித்த எடப்பாடி: சுயமரியாதைத் தூண்டுதலா, எலும்புத் துண்டுக்கான சீற்றமா?

அ.தி.மு.க. என்பது தமிழ்நாட்டின் அவமானச்சின்னம்! பாசிஸ்டுகளான எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தன்மானமும் சுயசார்பும் இல்லாத ஒட்டுண்ணித் துதிபாடிகள், பிழைப்புவாதிகள் கூட்டத்தை வைத்தே இக்கட்சியைக் கட்டி வளர்த்தெடுத்து வந்துள்ளனர்.

from vinavu https://ift.tt/shZvQit
via Rinitha Tamil Breaking News

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு | தோழர் மருது | வீடியோ

பீகார் மாநில அரசு மேற்கொண்டுள்ள சாதி வாரி கணக்கெடுப்பு – மத ரீதியான கணக்கெடுப்பின் தாக்கம் குறித்தும், பாசிச பாஜக அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான அரசியல் குறித்தும் மக்கள் அதிகாரம் செய்தித் தொடர்பாளர் மருது அவர்களின் விரிவான நேர்காணல். காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/htMSe5u
via Rinitha Tamil Breaking News

Monday, October 2, 2023

மக்கள் கல்வி கூட்டியக்கம் ஒருங்கிணைத்த ஆசிரியர்களின் கோரிக்கை மாநாடு | மதுரை

மக்கள் கல்வி கூட்டியக்கம் ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது தேவையானது என்பதை மாநாடு பறைசாற்றியிருக்கிறது.

from vinavu https://ift.tt/G4NXMs7
via Rinitha Tamil Breaking News

காவிரி உரிமை: கர்நாடகத்தில்? தமிழ்நாட்டில்? | தோழர் மருது

காவிரி உரிமை: கர்நாடகத்தில்? தமிழ்நாட்டில்? தோழர் மருது, மாநில செய்தித்தொடர்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை. காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/YZxf6SQ
via Rinitha Tamil Breaking News

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | விருத்தாசலம் அரங்கக் கூட்டம் | செய்தி – படங்கள்

விருத்தாசலம் அரங்கக் கூட்டம்

from vinavu https://ift.tt/NHQXZk6
via Rinitha Tamil Breaking News

வாச்சாத்தி தீர்ப்பு ஆப்ரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெத் | தோழர் வெற்றிவேல்செழியன்

வாச்சாத்தி தீர்ப்பு ஆப்ரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெத் தோழர் வெற்றிவேல்செழியன், மாநில செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை. காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/omspIa2
via Rinitha Tamil Breaking News